திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி மின்பணியாளர் திரு சூசை மாணிக்கம் அண்ணன் அவர்கள் வயது முதிர்வு காரணமாக 30.09.2014 செவ்வாய் கிழமை அன்று பணி நிறைவு பெறுகிறார்.
திரு சூசை மாணிக்கம்
மின்பணியாளர் சுரண்டை பேரூராட்சி
அவரது பணி நிறைவு பாராட்டு விழா 30.09.2014 செவ்வாய் கிழமை அன்று சுரண்டை பேரூராட்சி அருகில் உள்ள சிவகுருனதபுரம் நாடார் மகிமை கல்யாண மண்டபத்தில் வைத்து இனிதே நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு நமது திருநெல்வேலி மாவட்ட தொழில் நுட்ப பணியாளர் நலச்சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் சிறுவிடுப்பு எடுத்துக்கொண்டாவது வந்து கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நிகழ்ச்சி நிரல்
மதியம் 12.00 மணிக்கு அனைவரும் வந்துசேருதல்
மதியம் 01.00 to 03.00 மணி வரை மதிய விருந்தோம்பல்
மாலை 03.00 to 04.00 மணி நிகழ்ச்சி துவக்க ஏற்பாடு
மாலை 04.00 to 06.00 மணி வரை பணி நிறைவு பாராட்டு விழா
மாலை 06.00 to 07.00 மணி வரை மாலை சிற்றுண்டி விருந்தோம்பல்
அன்புடன்
சௌரிராஜன் ஆய்குடி தலைவர்
பாரத் பணகுடி செயலர்
TPTEWA திருநெல்வேலி மாவட்டம்

No comments:
Post a Comment