Tuesday, 30 September 2014

30.09.14 சுரண்டை மின்பணியாளர் திரு சூசை மாணிக்கம் பணிநிறைவு விழா

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை பேரூராட்சியில் பணி புரிந்து வந்த திரு சூசை மாணிக்கத்தின் பணி நிறைவு பாராட்டு விழா இனிதே நடை பெற்றது

தலைமை //  சுரண்டை பேரூராட்சி மன்ற தலைவர் திரு பழனி நாடார் அவர்கள்

முன்னிலை // சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி திரு பொன்னம்பலம் அவர்கள்

அணித்துரை // கீழப்பாவூர் அதிகாரி திரு விஜயகுமார் மற்றும் தனபால் இ.ஓ அவர்கள்

மற்றும் நமது சங்கத்தின் தலைவர் சௌரிராஜன், செயலர் பாரத், பொருளாளர் எசக்கிராஜன்

துணை தலைவர் அசன் நிறுவன தலைவர் உசேன் மற்றும் முன்னால் சங்க தலைவர் இசக்கிமுத்து அண்ணன் ஆகியோரும் கலந்தது கொண்டு விழாவினை நல்ல முறையில் சிறப்பித்தனர்.

சுரண்டை பிட்டார் முருகன் அவர்கள் வந்து இருந்த சங்க உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்று உற்சாகம் அளித்தார்.

மதியம் சைவம் மற்றும் அசைவ விருந்துகள் பரிமாறப்பட்டது

அனைவரும் சந்தோசத்துடன் விருந்து உண்டனர்

மாலை பாராட்டு விழா இனிதே நடைபெற்றது

திரு சூசை அவர்களுக்கு மாமனிதர் என்ற பட்டம் ஷீல்ட் வழங்கப்பட்டது

ஆளுயர மாலை அணிவிக்க பட்டது

5000 வலா சரவெடி போட்டு உற்சாகம் வெளிபடுத்த பட்டது

பின்பு சங்க உறுபினர்கள் சலவை அணிவித்து ஊர்வலமாக சூசை வீடு செல்லப்பட்டது அங்கு மாலைவிருந்தாக சுவையான சப்பாத்தி வழங்கப்பட்டது. நன்றியும் வாழ்த்துகளுடன் உறுப்பினர்கள் அனைவரும் பிரியா விடைபெற்றனர்.

No comments: